Saturday, December 7, 2013

திருவாசகம் - மாணிக்கவாசகர் - இளையராஜா

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் 
இளையராஜா திருவாசகத்துக்கு இசை வடிவம் கொடுத்த பின் இப்படியும் சொல்லலாம்
இளையராஜாவின் திருவாசக இசைக்கு உருகாதார் ஒருஇசைக்கும் உருகார்.

எனக்கு திருவாசகத்தின் பொருள் தெரியாது. ஆனால்  இளையராஜா இப்படி ஒரு இசையை தந்த பின் மாணிக்கவாசகரின் படைப்பின் உயரம் தெரிகிறது.

ஒரு கற்பனை பாத்திரத்துக்கே (சிவபெருமான்) இப்படி என்றால், ஒரு வேளை அது உண்மையாக இருந்திருந்தால்..........

            மாணிக்கவாசகருக்கு பாட்டுக்கடவுளாகவும்,
                    இளையராஜாவுக்கு இசைக்கடவுளாகவும்
                                பதவி உயர்வு கிடைத்திருக்கும்.

Wednesday, February 27, 2013

திருமண வேளை : முதலாம் ஆண்டு

குமுதம் கேள்வி பதில் பகுதியில் வைரமுத்துவிடம் ஒர் எளிய கேள்வி.
வாழ்க்கை என்பது என்ன?
கொஞ்சம் சிக்கலான கேள்வி தான்,ஆனால் அவரும் சளைக்காமல் எளியதாகவே பதிலலித்தார்.
திருமணத்திற்கும் இழவுக்கும் ஆள் சேர்க்கும் போராட்டம்.
யாராலும் மறுக்க முடியாத பதில்.

கடந்த ஆண்டு என் திருமணத்திற்கு வருகை தந்தும் தொலைதொடர்பு கொண்டும் வாழ்த்திய அனைவரையும் நினைக்கும் போது, என் முதல் பாதி போராட்டம் வெற்றி பெற்றதாகவே தெரிகின்றது.

வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி கூறி அசிங்கப்படுத்தாமல் என் மகிழ்ச்சியில் பங்களிக்கிறேன்.