Monday, February 13, 2012

திருமண வேளை 4: கடலை மிட்டாய்

திருமண விருந்திற்கு சமையல் கலைஞர்களை தேர்வு செயத பின், உணவு பண்டங்களை பற்றி அப்பா அம்மாவுடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்போது,

'பாத்தியா கடலை மிட்டாயை விட்டுட்டோம்' ..... இது என் அப்பா.

'அட ஆமா கடலை மிட்டாயை மறந்திட்டோம். கண்டிப்பா சேர்க்கனும்'..... இது என் அம்மா.

'???!!!!ுதம்புத்முஇதமிஅஉ*&%%&**&ஈடனூபரிஒரதமி!!!-+=!!' .... இது நான்.
ஒன்னும் புரியல.

வீட்ல நடக்குற கடைசி திருமணத்தின் விருந்தில் கடலை மிட்டாய் வைக்கனுமாம்.
அதன் பொருள், 'எங்க வீட்ல நடக்குற கடைசி திருமணம்.'

எனக்கென்னமோ இதல ஏதோ உள் குத்து இருக்குற மாதிரி தோனுது. கண்டுபிடிச்சவுங்க சொல்லுங்க.

No comments:

Post a Comment